Thursday, January 11, 2007

சதிகாரர்களின் ' சேவை'

இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!

நான்கு பேர் நல்ல முறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற செவிலியர்கள். இவர்களோடு சேர்த்து ஒரு மருத்துவர். இவர்கள் அனைவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். லிபியாவில் மருத்துவ சேவைக்காக வந்தவர்கள்.

ஆனால் இவர்களுக்கு லிபிய அரசு விரைவில் மரண தண்டனை வழங்க இருக்கின்றது. கடந்த டிசம்பர் பத்தொன்பது அன்று திரிபோலி உயர்நீதி மன்றத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதி அரசர் மஹ்மூத் ஹவீஸா. தீர்ப்பைக் கேட்டதும் திரிபோலி வீதிகளில் திரண்ட மக்கள் இறைவனின் புகழ் பாடி கொண்டாடி இருக்கின்றார்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

இதயத்தை உறைய வைக்கும் அந்தச் செய்தியை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். பச்சிளம் குழந்தைகளின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் கிருமிகளைச் செலுத்தியதுதான்.

இவ்வாறு நானூறு குழந்தைகளை எய்ட்ஸ் நோயாளிகளாக ஆக்கி இருக்கின்றார்கள் இந்த ஐரோப்பியர்கள்...! குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாத எய்ட்ஸ் நோய் குழந்தைகளை தொற்றிக் கொண்டதெப்படி?

விசாரணையில் பல்கேரியாவைச் சேர்ந்த செவிலியர்களும் மருத்துவர்களும்தான் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸைச் செலுத்தியுள்ளனர் என்று கண்டு பிடிக்கப் பட்டது. தலைநகர் திரிபோலியில் இயங்கி வருகின்ற பின்காஜி மருத்துவ மனையில்தான் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆபாசத்தின் பிறப்பிடமாக நிர்வாண வக்கிரத்தின் உறைவிடமாக உல்லாச கேளிக்கைகளின் இருப்பிடமாக இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். ஆனால் அங்கு ஏன் எய்ட்ஸ் பரவவில்லை?

இந்த ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகமாக வேரூன்றாத குடும்ப அமைப்பு சிதறாமல் இருக்கின்ற ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் அது ஏன் பரவிக் கொண்டிருக்கிறது?

எய்ட்ஸ் நோய் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மூலம் பரவுகின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள். ஆனால் அந்த வைரஸ் உருவானதெப்படி? யார் உருவாக்கினார்கள்? அறிவியல் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப் பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில்தான் லிபியாவிலிருந்து வந்த செய்தி அமைந்துள்ளது.

பல்கேரிய செவிலியர்களுக்கு பின் புலமாக இயங்குகின்ற சக்தி எது? உலகம் முழுவதும் எத்தனை மருத்துவ மனைகளில் எத்தனை செவிலியர்கள் இவ்வாறு 'மருத்துவ சேவையில்' ஈடுபட்டிருக்கின்றார்கள்? இந்தச் சேவகர்களிடமிருந்து உலகைக் காப்பாற்றுவது யார்?

நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது.

நன்றி : சமரசம்.

No comments: